பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல்போனதாக அறிவித்தால், அத்தகைய காணாமல்போனவர்களின் இறப்புகளை அதிகாரபூர்வமாக பதிவுசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திணைக்களத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  திணைக்களத்தின் அறிவித்தலின்படி, தேசிய பேரிடர் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் இறப்புகளைப் பதிவுசெய்வதற்கான தற்காலிக…

Read More

யாழ். பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேருக்கு நாளை (12) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  கனிஷ்ட மாணவர்களை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதற்காக குறித்த மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நேற்று (10) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்களை நாளை (12) வரை விளக்கமறியலில்…

Read More
rauff

பாதிக்கப்பட்டவர்களின் நீர், மின் கட்டணங்களை குறையுங்கள் – ஜனாதிபதிக்கு ஹக்கீம் கடிதம்

2025 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.  இதையடுத்து,அவற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்….

Read More

GOOGLE MAP வீதி வரைபடம் புதுப்பிப்பு

வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து கூகுள் மெப்ஸ் (Google Maps) A மற்றும் B வீதி வரைபடத்தை புதுப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 12,000 கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதிகளில் நிகழ்நேர தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அமைச்சர் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனை அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் பயணங்களை மிகவும் வினைத்திறனுடன் திட்டமிட உதவுவதற்காக வீதி மூடல் மற்றும் கட்டுமான அறிவித்தல்…

Read More
arrest

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பலர் கைது !

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 270 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 123 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய…

Read More

இலங்கை மறுகட்டுமான திட்டத்திற்கு EFCITA வழங்கிய ரூ. 20 மில்லியன் நன்கொடை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு புறக்கோட்டை  அத்தியாவசிய உணவுப்பொருட்கள்  இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினால் (EFCITA) இன்று 20 மில்லியன் ரூபா பணத்தொகை  நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முன்னிலையில் நிதியமைச்சின் பிரதியமைச்சர் (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் EFCITA வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்ரமணியம், பொருளாளர்  ஹரிஹரன் மற்றும் முன்னாள் தலைவர்  நிஹால் செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டதுடன் …

Read More

மூதூர் பகுதியில் வெள்ளத்தினால் செங்கல் சூளைகளும் பாதிப்பு!

மூதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கல் சூளை தொழிலாளர்களும் மீள தமது தொழில்களை செய்வதற்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். மூதூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக செங்கல் சூளைகளில் இருந்த செங்கற்கள் மற்றும் மூலப்பொருட்கள் என்பன வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமது தொழிலை மீள ஆரம்பிக்க அரசு தமக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். மூதூர் பிரதேசத்தில் இருதயயுரம், ஷாபிநகர், ஜின்னாநகர்,…

Read More

கயந்த கருணாதிலக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலை!

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது விவசாய அமைச்சை செயற்படுத்துவதற்காக, இராஜகிரிய பகுதியில் கட்டிடமொன்றை வாடகைக்கு வாங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு கயந்த கருணாதிலக்க அவ் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராகவும், முன்னாள் ஊடக அமைச்சராகவும் கயந்த கருணாதிலக்க பணியாற்றியிருந்தார். இன்று காலை 9 மணியளவில் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை…

Read More

வெனிசுலா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது

அமெரிக்கா, வெனிசுலா கடற்கரைக்கு அப்பால் உள்ள அதன் தடைகளுக்கு உட்பட்ட ஒரு எண்ணெய் கப்பலை (Oil Tanker) பறிமுதல் செய்துள்ளது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா அரசாங்கம் இதனை “சர்வதேச கடற்கொள்ளை செயல்” எனக் கண்டித்ததுடன், இது “வெளிப்படையான திருட்டு” என்றும், இதை சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தது

Read More

வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள்

கண்டி மாவட்ட அனர்த்தம் காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான பழுதடைந்த உணவுப் பொருட்கள் கம்பளை, கெலிஓயா, கஹட்டபிட்டிய முதலான பகுதிகளில் உள்ள பிராதன வீதிகளில் குவிந்துள்ளன. அவற்றை அகற்றுவது கூட பாரிய சிரமமாக உள்ளதாகத் தெரியவருகிறது. பல்லாயிரக்கணக்கான தொன்கள் எடை கொண்ட இப்பொருட்களை எங்கு எடுத்துச் செல்வது?  எங்கே? கொட்டுவது என்பன கூட பாரிய சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மாவு, பருப்பு, வெங்காயம், மருந்துப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஆடை அணிகள், வீட்டுத்தளபாடங்கள்   என விதம்…

Read More