நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (11) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த…

Read More

25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார். அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

காற்றின் தரக் குறியீட்டின் சமீபத்திய நிலை

காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் நேற்று (09) காற்றின் தரக் குறியீடு (SL AQI) சற்று மோசமான நிலையில் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் வானிலை நிலையைப் பொறுத்து, இன்றைய காற்றின் தரக் குறியீடு நாள் முழுவதும் 40 முதல் 64 வரை இருக்கலாம் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்திலும், யாழ்ப்பாணம், வவுனியா,…

Read More

பயிர்கள் தொடர்பான தகவல்களை பெற புதிய குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகம்

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் இந்த தகவல்களை பெறலாம் . இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு…

Read More

வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய…

Read More

அநாகரிகமாக செயற்பட்ட யூடியூப்பர் உள்ளடங்கலாக நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்.

அண்மையில் யூடியூப்பர் ஒருத்தர் உதவி செய்வதாக கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப்பர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து அந்த குழு மீண்டும் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையிலேயே…

Read More

வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணிநீக்கம்!

வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை போக்குவரத்து சேவைகளில் பெண்களை சேர்ப்பதற்கான கொள்கை முடிவ

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் சேவையில் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அவர் இதனை தெரிவித்தார் நாளை (08) வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை பேருந்துகள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் காவல்துறையினருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை…

Read More