நஞ்சுகள், அபின், அபாயகரமான ஔடதங்கள் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பேச்சு

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது. நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும்…

Read More

மின்னஞ்சல் ஊடாக வந்த அச்சுறுத்தல் ; பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தில் பதற்றம்!

பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மின்னஞ்சல் இன்று புதன்கிழமை (14) காலை 09.24 மணியளவில் பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மின்னஞ்சலில் பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனையடுத்து இது தொடர்பில் பதுளை பொலிஸ் தலைமையகம் மற்றும் கொழும்பு தொழில் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: 03 சந்தேக நபர்கள் கைது

லுணுகம்வெஹெர மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லுணுகம்வெஹெர – உனத்துவேவ பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3,983 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் தனமல்வில, தேவ்ரம்வெஹெர பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர…

Read More
Cyber security

இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக…

Read More

பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் விசேட நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் சோதனை

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,995 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 659 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 279 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 171 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 539…

Read More

“முழு நாடுமே ஒன்றாக”: 956 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 486 கிராம் ஹெரோயின், 544 கிராம் ஐஸ், 10 கிலோகிராம் 83 கிராம் கஞ்சா, 15,511 கஞ்சா செடிகள், 02 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 224…

Read More

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின்  சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.      அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார்…

Read More
Norochcholai

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு திரும்பியது!

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறித்து, தற்போது கணினியில் சேர்க்கப்படவில்லை எனவும், எதிர்வரும் சில நாட்களில் அது கணினியில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் 03 மின் பிறப்பாக்கிகள் மூலம் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு  வழங்கிவந்த நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே தேசிய மின்சார…

Read More

நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கை வரைபடம்: இலங்கையின் பொருளாதார மாற்றம்

கொழும்பு – ODI குளோபல் மற்றும் வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) ஆகியன இணைந்து தயாரித்த “இலங்கையின் உருமாற்ற பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துதல் (2025-2030)” எனும் நூல், ஜனவரி 8, 2026 அன்று கொழுபு 07இல் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரி நிறுவனத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு புதிய நூலாசிரியர்களின் மேற்பார்வை மற்றும் பங்களிப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டது. 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த நூல்…

Read More

வரியை குறைப்பதாகக் கூறிவிட்டு, 500 சதவீதத்தால் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது – சமிந்திரானி கிரியெல்ல

மக்களின் வரிச் சுமையை குறைப்பதாகக் கூறிவிட்டு, வரியை 500 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல செவ்வாய்க்கிழமை (06) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகப்படியான வரிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்குவதாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால்,…

Read More