காலி மாநகர சபையில் குழப்பநிலையை ஏற்படுத்திய மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது!

காலி மாநகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறப்படும் காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  காலி மாநகர சபையின் மேயர் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி அவர் மீது தண்ணீரை தெளித்து “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர். …

Read More
DEATH

நாகொடை துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த “ரஜவத்தே சத்துவா” போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவரா?

களுத்துறையில் நாகொடை வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,  நாகொடை வைத்தியசாலைக்குள் இன்று காலை 6.00 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுத்துறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

டித்வா சூறாவளி பாதிப்பு: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் உள்ளிட்ட 8 சுகாதார நிறுவனங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். 

Read More

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

Read More

ஆசியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியல் – இலங்கை 5-ஆம் இடத்தில்

2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில், இலங்கை 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை இதனை வெளியிட்டுள்ளது. மவுண்ட் ஃபூஜி, டோக்கியோ, பலாவான், சியோல் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களுடன் இலங்கை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 1-ஆம் இடம் – ஜப்பானின் மவுண்ட் ஃபூஜி, 2-ஆம் இடம் – டோக்கியோ, 3-ஆம் இடம் – பிலிப்பைன்ஸின் பலாவான், 4-ஆம்…

Read More

யாழில் கடற்தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு  – நாகர்கோவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாளையடி, நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்களுக்கும் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், தங்களுக்கு…

Read More

அவசரகால நிலை நீடிப்பு..! வர்த்தமானி வெளியீடு.

நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் இந்த பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
SLPP

ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின்  பொலிஸ்மா அதிபராக செயற்படுகிறாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி தொடர்பில் அரசாங்கம் வெறுப்புடன் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சகல ஊடக நிறுவனங்கள் மற்றும்…

Read More

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம் ; லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மலையகத்துக்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில்…

Read More
Paffrel

2026 க்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி ஆரம்பமாகும் ; பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய ‘ A ‘ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் விஜயம் செய்வார்கள். வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே அதிகாரிகள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Read More