இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெத்லகேமில் நத்தார்: நம்பிக்கையும் மீட்சியும்

காஸா பகுதியில் போர்நிறுத்தம் நிலவும் நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நத்தார் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளன. ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, பாரம்பரிய ஊர்வலமாக ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் வந்தார். காஸா கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து மக்களின் அன்பும் தைரியமும் செய்தியாக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விழா மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சுற்றுலாவை சார்ந்த பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மீண்டும் வாழ்வாதார…

Read More

கார் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மீட்பு – பொலிஸார் விசாரணை!

ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, T-56 ரக துப்பாக்கியும் ஒரு தொகை தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, வாகனத்திற்குள் இருந்து T-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக…

Read More

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து ; குழந்தை உட்பட மூவர் காயம்!

காலி – பெரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

“குடு ரொஷான்” துப்பாக்கியுடன் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமாக “குடு ரொஷான்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது “குடு ரொஷான்” என்பவரிடமிருந்து மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) சரணடைந்துள்ளார்.  கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனையடுத்து அர்ச்சுனாவு இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Read More

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையைப் பெறுவதற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார தெரிவித்துள்ளார்.  கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.  குறித்த கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தலைமையில் நடைபெற்றது.. இதன்போது…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 901 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 901 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 01 கிலோ 487 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 04 கிலோ 925 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01  கிலோ  056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  05 கிலோ …

Read More

தையிட்டி சம்பவத்துக்கு பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று (24) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இன்றைய அமர்வில் 2 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.  இந்த அமர்வில் 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அத்துடன் அண்மையில் தையிட்டியில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கும்…

Read More

கொழும்பில் ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 09.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறைப்பாடு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக…

Read More