First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that their Chairman, Rajendra Theagarajah, was honoured with the Silver Award for Outstanding Independent Non-Executive Director of the Year at the inaugural SLID–ACCA National Corporate Director Awards 2025, in recognition of his leadership, integrity and contribution to strengthening corporate governance standards…
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தை உறுதிப்படுத்துங்கள் ; இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்து
சட்டமா அதிபரைக் குறிவைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. குறித்த சமூக ஊடகப் பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுயாதீனத்தன்மையில் நியாயமற்ற முறையில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றவியல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில், சட்டமா அதிபர் ஒரு பகுதியளவு நீதித்துறை சார்ந்த கடமையை ஆற்றுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதா அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா என்பதை சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, அந்தத் தகவல்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையா என்பதையும், அவற்றின் அடிப்படையில் தண்டனை கிடைப்பதற்கான நியாயமான வாய்ப்புகள் உள்ளனவா என்பதையும் அவர் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
சட்டமா அதிபரின் தீர்மானங்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை அதிகார வரம்பின் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பின் மூலமாகவோ மீளாய்வு செய்யப்படக் கூடியவை.
நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பகுதியளவு நீதித்துறை அதிகாரிகளால் சட்டத்திற்கு இணங்க எடுக்கப்படும் தீர்மானங்கள், சில சமயங்களில் பொதுமக்களின் கருத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டமா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் எந்தவிதமான தேவையற்ற தலையீடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சட்ட அமலாக்க முகவர் அமைப்புகளினதும் கடமையாகும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாக நம்புகிறது.
நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாத சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
நீதி மற்றும் சுதந்திரம் ஆகிய உன்னதக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் கண்ணியம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

