அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் பிரவுன் பல்கலைகழகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில், சனிக்கிழமை (13) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கறுப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிதாரியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக பிராவிடன்ஸ் பொலிஸ் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.

“நினைக்க முடியாதது நடந்தது,” என்று சோகமான ரோட் தீவு ஆளுநர் டான் மெக்கீ இதன்போது அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

One thought on “அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *