65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வக் கற்பாறை
கண்டி மாவட்டத்தில் கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வக் கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தித்வா சூறாவளியினால் குறித்த ஆலய வளாகத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவினை தொடர்ந்து குறித்த கற்பாறை ஆலய வளாகத்திற்கு வந்துள்ளதாகவும், கற்பாறையின் ஒரு பகுதி நீல நிறத்தில் காட்சியளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா பொலிஸார் கற்பாறைக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் இந்த கற்காறை தொடர்பில் அறிக்கையை வழங்க உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.


