ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
Janashakthi Finance relocates Nugegoda branch to enhance customer convenience and accessibility ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் அணுகலை மேம்படுத்த அதன் நுகேகொடை கிளையை இடமாற்றம் செய்துள்ளது
JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அதன் நுகேகொடை கிளையை இலக்கம். 136/5, S. De S. ஜயசிங்க மாவத்தை, நுகேகொடை என்னும் முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது. இப் புதிய இடம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடியதும் நட்புறவானதுமான சூழலை வழங்குவதோடு வாடிக்கையாளர்களுக்கான சௌகரியத்தையும் சேவைச் சிறப்பையும் மேம்படுத்தும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது
கொழும்பின் பரபரப்பான நகர்ப்புறத்தின் மையத்தில் அமைந்துள்ள இப் புதிய வளாகம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அணுகல் மற்றும் முன்னேற்றகரமான வசதிகளை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் சேவைகளை மிகவும் வசதியான மற்றும் பயனுறுதிமிக்க சூழலில் பெற்றுக் கொள்ளலாம்.
இக்கிளையானது தொடர்ந்தும்வைப்புகள், சேமிப்புக்கணக்குகள், லீசிங், தங்கக்கடன்கள், மாற்றுநிதித்தீர்வுகள், கூட்டு நிறுவன மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன நிதியுதவிகள் உள்ளிட்ட விரிவான சேவைத் தொகுதியோடு தனிநபர் மற்றும் வணிகத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயன் நிதிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
திறப்பு விழாவில் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், “எங்கள் கிளைகள் அமைந்துள்ள இடங்களைத் தீர்மானிக்கும் போது வாடிக்கையாளர் வசதியும் அணுகலும் முக்கிய முன்னுரிமையாகும். நுகேகொடை செறிந்தமக்கள்தொகையை கொண்ட சுறுசுறுப்பான வணிக மையமாகும். இந்த இடமாற்றம் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் அதேவேளை சேவைத் தரத்தையும் உயர்த்த உதவுகிறது. எமது சமூகத்தின் தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் நிதி அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்றார்.
“எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளனர். நுகேகொடை ஊழியர் குழு தொழில்முறை சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயன்முறை நேரத்தை உறுதி செய்யும். இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு தங்கள் நிதி இலக்குகளை நம்பிக்கையுடன் அடைய தேவையான ஆதரவு கிட்டும்.” என ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் வழிமுறைகளின்(Channels) தலைவர் சமிந்த ரத்நாயக்க கூறினார்.
நாடெங்கிலும் விரிந்த கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள ஜனசக்தி பைனான்ஸ் இலங்கை முழுவதும் தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு நிறுவனம் பங்களித்து வருகிறது.
