நாட்டில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்…

Read More

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மிக விரைவில் சம்பந்தப்பட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More

“CLEAN SRILANKA ” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியா உதவி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது. புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் இரு நாடுகளுக்கும் இடையிலான 70 வருட நட்புறவை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் புதிய அரசாங்கங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு…

Read More

வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை இல்லை.

வங்கக்கடலில் இன்று(வெப்ரவரி 25) காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.1ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலங்கையில் நடக்கவிருக்கும் SK 25 படப்பிடிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வதுபடமான “பராசக்தி” திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கிவருகின்றார். இந்திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பமாகியது. இந்த படத்தில் ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள். “பராசக்தி” திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் சுதா “ஷூட்டிஅரிஸ் ” எனும் காஸ்டக்கில் பதிவிட்டு வருகின்றார். அந்த பதிவில் இனி வரப்போகும் காலங்களில் இலங்கையின் முக்கிய இடங்கள் இடம்பெற போகின்றன. PARASAKTHI -Title Teaser ரைவைத்து பார்த்தால் இது ஒரு…

Read More

நாட்டின் காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக த தெரண ஊடகத்திற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகெபொல, எஹெலியகொட, கலவான…

Read More

சிவனொளிபாத மலைப்பகுதியில் தீ பரவல்.

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் சுமார் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீ அதிக வெப்பமனா காலநிலையினால் சிவனொளிபாதமலை தொடர் வரை பரவியது. எனினும் பெரும் பூரேற்றத்துக்கு மத்தியில் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் உதவியுடன் காட்டுத் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரி வீ.ஜே. ருக்ஷான் தெரிவித்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து கடும்…

Read More

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26.02.2025) ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

Read More

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Read More