உயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில்  ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இதன்படி, 100,000 ஆண்களில்  27 உயிரிழப்புகளும், 100,000 பெண்களில் ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.  நாட்டில் மொத்த உயிர்மாய்ப்புகளின்  விகிதம் 100,000 க்கு 15 ஆக பதிவாகியுள்ளன.  இது உலகளவில் சராசரியாக 10.5 ஐ விட மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022ம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின் படி உயிர்மாய்ப்பு விகிதம் வயதுக்கு…

Read More

நானுஓய வரை மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத போக்குவரத்து

மலையக ரயில் பாதையின் இயக்கம் இன்று (19) நானுஓயாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இடல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் இது நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், ரயில் பாதை இன்று (19) இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் தொடர்ந்து நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (19) பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்….

Read More

APEX 2026 விருது வழங்கும் விழாவில் சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவை – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள…

Read More

சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகள் – அமைச்சரவை அங்கீகாரம்

பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றுநோயால் 2021 – 2024 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சுகாதார சேவை கருத்திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. …

Read More

உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது

கிளவுட்ஃப்ளேர் செயலிழப்பால் உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது உலகளாவிய இணைய உட்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் (Cloudflare)-இல் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணையத்தின் சில பகுதிகள் முடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் மற்றும் சேவை கண்காணிப்புத் தளங்களின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.இதன் விளைவாக, X சமூக ஊடகம், லெட்டர்பொக்ஸ்ட் (Letterboxd) உள்ளிட்ட பல பிரபலமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிளவுட்ஃப்ளேரின் சொந்த நிலைத் தகவல் பக்கமும் (status page) சில நேரம் செயலிழந்தது. அத்துடன்,…

Read More

பாலங்களின் நிர்மாண பணிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள 74 பாலங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு…

Read More

அந்த இடத்தில் விகாரை எதுவும் இருக்கவில்லை உணவகம் தான் இருந்தது-ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, திருகோணமலை சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து அறிக்கை கோருவதாகக் கூறினார் . பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. சில குழுக்கள் ஏன் இன்னும் குழப்பத்தை உருவாக்குகின்றன? அவர்கள் அனுமன் தீ வைப்பது போல தீ வைக்கிறார்கள். இனவெறிக்கு முற்றிலும் இடமில்லை. அந்த விளையாட்டுகள் முடிந்துவிட்டன.” அனைத்து நாட்டுமக்களும் இனவாத தூண்டுதலை நிராகரித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இன பதட்டங்களை மீண்டும் உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக…

Read More

புத்தர் சிலை விவகாரம் – தடயவியல் பொலிஸார் கள ஆய்வு

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு நேற்று (17) சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் உடைந்த பொருட்கள் மற்றும் கம்பி வேலி தொடர்பில் பரிசீலனை செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை (16) இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை (17) பகல் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின்…

Read More

சம்பள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள்…

Read More