வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடுமையான சட்டம்

வரி ஏய்ப்பு மற்றும் வரியை ஏமாற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்கப்படும் என்றார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் மேலதிகக் கட்டணங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read More

சியாம்பலாண்டுவில் ஒரு புதிய சூரிய மின் நிலையம்

சியாம்பலாண்டுவில் புதிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Read More

நீர் இன்றி அமையாது உலகு – இன்று சர்வதேச நீர் தினம்

ஆண்டுதோறும், மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும். நாடுகளின் புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த…

Read More

2025 வரவு செலவு திட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றிதழை பதிவு செய்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நிறுத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (21) நடைபெற்றது. ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது…

Read More

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும்…

Read More

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

மட்டக்களப்பு சந்திவெளியில் 2017 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெ. பிரபாகரன் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை, ரி-56 ரக துப்பாக்கியால் அப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக் குழு…

Read More

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பான முறைப்பாடுகளை ஆராய புதிய குழு நியமனம்!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.  குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.  பெயரை வெளிப்படுத்த விரும்பாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால்…

Read More

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்தியவங்கியின் அறிக்கை

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  மேலும், பின்வரும் கம்பனிகளும்/செயலிகளும், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம்…

Read More

தீ அனைப்பு உபகரணங்கள் மேம்படுத்துவதற்காக ஜப்பானின் உதவியின் கீழ் விசேட திட்டம்

இலங்கை முதலீட்டு சபை (BOI)யின் கீழ் செயல்படும் ஏற்றுமதி வலயங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 14 ஏற்றுமதி வலயங்களிள் உள்ள 285 நிறுவனங்களில் சுமார் 145,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த வலயங்களில் தீயணைப்பு திறனை மேம்படுத்துவது ஊழியர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 லிட்டர் தண்ணீர் தொட்டி கொள்ளளவு…

Read More